ராணிப்பேட்டை, அக். 18 – ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், சின்னக்குண்டி தோப்பு தெருவில் தவறுதலாக தனி நபருக்கு பட்டா கொடுத் துள்ளனர். இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. போக்குவரத்தும் தடைபடுகிறது. இதனால், அந்த பட்டா ரத்து செய்து கழிவுநீர் கால்வாயை அகற்றி சாலை அமைத்து தர வேண்டும். பாப்பேரி ஓடை புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்து விவசாயி கள் நடமாட்டத்தை தடுக்கும் தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணமின்றி விவசாயி களையும், பொதுமக்களையும் அலைக்கழிக்கும் கோட்டாட்சியர் உள்ளிட்ட சில அரசு அதிகாரிகளின் அடாவடி போக்கை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆற்காடு வட்டார தலைவர் எ. குமார் தலைமையில் ராணிப் பேட்டை கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு வெள்ளியன்று (அக். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலா ளர் இரா. சரவணன், மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் டி. சந்திரன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் கே. சேகர் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தின் போது கோட்டாட்சியர் ராஜராஜனை சந்தித்த சங்கத் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு மாதத்திற்குள் கோரிக்கை களுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.