districts

img

கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி பேருந்துகள்: ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, மே 9- கள்ளக்குறிச்சி மாவட்டம். நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற ஆய்வு முகாமில் பள்ளி பேருந்துகளின் இயக்க நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்து களின் இயக்க நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முகாம் வட்டார போக்குவரத்து அலு வலகத்தின் சார்பில் தனி யார் பள்ளியில் நடை பெற்றது. 49 பள்ளிகளில் உள்ள 510 பள்ளி பேருந்து களில் 352 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இதில் 63 பேருந்து களின் இயக்க நிலைகள் மற்றும் பாதுகாப்பு குறை பாடுகள் கண்டறியப்பட்டு அவை நிவர்த்தி செய்த பின், மறு ஆய்விற்கு உட்படுத்துமாறும், உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 24 பள்ளிகளில் உள்ள 104 பேருந்துகளில் 63 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 6 பேருந்துகளின் இயக்க நிலைகள் மற்றும் பாது காப்பு குறைபாடுகள் கண்ட றியப்பட்டு அவை நிவர்த்தி செய்த பின், மறு ஆய்விற்கு உட்படுத்துமாறும் கூறி பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பேருந்துகளை சுமார் 1 கி.மீ. தூரம் இயக்கி ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து போக்குவரத்து துறை மற்றும் தீயணைப்புத் துறையின் சார்பில் விபத்து காலங்களில் பேருந்து ஓட்டுநர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி ஓட்டுநர்க ளுக்கு அளிக்கப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். வருவாய் கோட்டாட்சி யர் லூர்துசாமி, உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலு வலர் (பொ) ஜெய பாஸ்கரன்.  துணை காவல் கண்காணிப்பாளர் தேவ ராஜ், மாவட்ட கல்வி அலு வலர் (தனியார் பள்ளி கள்) துரைராஜ், உதவி தீய ணைப்பு  துறை அலுவலர் ஜமுனா ராணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வம், ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.