districts

img

திருப்பத்தூரின் அடையாளம் தோழர் ஜாபர் சாதிக்

திருப்பத்தூர், பிப் 17 - திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளமாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் ஜாபர் சாதிக் என்றும் அவர் கடைபிடித்த கொள்கைகளையும் லட்சி யத்தையும் தொடர்ந்து முன்னெடுப்பது தான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான புகழஞ்சலி என்றும் கே.பாலபாரதி தெரி வித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலூர், திருப்பத்தூர் ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜாபர் சாதிக் படத்திறப்பு விழா மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பத்தூர் கோட்டை பகுதியில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கி னார். வீரமணி வரவேற்றார். தோழர் ஜாபர் சாதிக் படத்தை திறந்து வைத்து  உரையாற்றிய கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி, நமது நாட்டில் மத நல்லி ணக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்த தொடர்ந்து செயல்  பட்டு வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இத னால், சிறுபான்மை மக்க ளின் தலைவர்கள் பலர் தங்களை சிபிஎம்-ல் இணைத்துக் கொண்டு திறம்பட செயலாற்றியவர். காஷ்மீர் மாநிலச் செய லாளர் முகமது யூசுப் தாரிகாமி, கன்னியாகுமரி நூர்முகமது, பெரியகுளம் ரசாக் அத்தா, கம்பம் அப்துல் வகாப் போன்றோர் பணியாற்றியுள்ளனர். அந்த வரிசையில் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளமாக வாழ்ந்து மறைந்தவர் ஜாபர் சாதிக்.  அவர் வாழ்ந்த காலம் முழுவதும், மக்களுக்காகவும் கட்சியின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்தார் என்றும் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.தயாநிதி, கே. சாமிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.காத்த வராயன், எஸ்.ஜோதி, வ.அருள் சீனிவாசன், எம்.இந்துமதி, ஏ.பிச்சை முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் ரகுமான் நன்றி கூறினார்.