ராணிப்பேட்டை, ஏப்.27- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தணிகை போளூர் ஊராட்சி பால கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளி யில் மாணவர்கள் சேர்க்கை விழா, பணி நிறைவு பாராட்டு விழா, சிறந்த தன்னார்வர்க ளுக்கான விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா தணிகை போளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரளா தேவி பிரவீன் குமார் தலைமையில் சனிக்கிழமை (ஏப். 27) நடைபெற்றது. இதில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்க ளின் செயலாளர் ரவிக்குமார், தமிழ்நாடு அறி வியல் இயக்க ராணிப்பேட்டை மாவட்ட தலை வர் கலைநேசன், கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியர் வீரமணி அறிவியல் ஆர்வலர் விஸ்வநாதன் முன்னிலை வகித்த னர். திருக்குறள் தமிழ் பேரவை தலைவர் வேல் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிக் கல்வி இணை இயக்குனர் குணசேகரன், வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், இஸ்ரோ இளம் விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் கலந்து கொண்டனர். இஸ்ரோ விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் பேசியதாவது : பாலகிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 3 மாணவர்கள் மட்டுமே இருப்ப தாகவும் இந்த பள்ளியை மூடி விட இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளி யானது. இதைத் தொடர்ந்து இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகை யில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்க ளுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக தரம் உயர்த்துவதற்கு உறுதுணையாக இருப்பேன். அதிலும் குறிப்பாக பாலகிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 4 மற்றும் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். இப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாண வர்களின் நடவடிக்கைகளை நான் மனதார பாராட்டுகிறேன். இதேபோன்று ஒவ்வொரு அரசு பள்ளி முன்னாள் மாணவர்களும் செயல்பட்டால் அரசு பள்ளிகள் இன்னும் சிறப்பாக செயல்படும். மாணவர் சேர்க்கை யும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு அரசு பள்ளி உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டு வர வேண்டும் என்றார். விழாவில் பணி ஓய்வு பெறவிருக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குண சேகரன், வட்டார கல்வி அலுவலர் ஆறு முகம், சமையல் உதவியாளர் விஜயா அண்ணாமலை ஆகியோருக்கு பாராட்டு நடந்தது. அதைத் தொடர்ந்து இல்லம் தேடி கல்வியில் பணியாற்றம் 21 மகளி ருக்கு மகளிர் திலகம் விருது வழங்கி கவுர விக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தணிகைப்போளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரளாதேவி பிரவீன் குமார், திருக்குறள் தமிழ் பேரவை தலைவர் வேல்குமார் ஆகியோர் செய்தி ருந்தனர்.