சென்னை,மார்ச் 22- இந்திய ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சில் மற்றும் கோமிஸா அமைப்புகள், இந்தியா - எத்தியோப்பியா வர்த்தகக் கருத்தரங்கிற்கு சென்னையில் ஏற்பாடு செய்திருந்தன. இதில் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான தொழில்துறையினர் பங்கேற்றனர். இந்தியப் பொருளாதார வர்த்தக சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் இந்தியாவுக்கான எத்தியோப்பிய தூதர் டாக்டர் டிஸிட்டா முலு கெட்டா, அந்நாட்டின் வணிகத் துறை அமைச் சர் டெமிசேவ் கெபெடெ டெக்லே, கோமிஸா வின் இயக்குநரான டாக்டர் பி. ராமகிரு ஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். எத்தியோப்பியாவில் முதலீடு செய்வதற்கு இந்தியத் தொழில்துறையினர் மிகப் பெருமளவில் ஆர்வமாக உள்ளனர். இரு நாடுகளிடையே பெருமளவிலான வர்த்தக உடன்பாடு குறிப்பாக மருந்துத் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, ஜவுளி, ஆயத்த ஆடை ஆகியவற்றில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வ மாக உள்ளதாக இந்த நிகழ்ச்சியில் தெரி விக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சக செயலர் வெங்கடாசலம் முருகன் தலைமையேற்று பேசுகையில், “ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்தியாவுக்குள்ள நல்லுறவு காரணமாக தமிழ்நாட்டின் தொழில்துறையினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம் என்றார். எத்தியோப்பியாவில் தமிழக தொழிற் துறையினருக்கு உள்ள வாய்ப்புகளை இந்தி யாவுக்கான எத்தியோப்பிய தூதர் விளக்கி னார்.