districts

img

சர்வதேச ஆராய்ச்சி மாநாடு பொறியியல் மாணவர்கள் பங்கேற்பு

சென்னை, ஜூலை 31-

     மலேசியாவில் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது.

     இந்த மாநாட்டில் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆகியோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

    இந்த மாநாட்டில் இக்கல்லூரியின் பல்வேறு துறைகளின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இது புதிய கண்டுபிடிப்புகளில் பல்கலைக் கழகத்தின் ஈடுபாடு மற்றும் உலகளாவிய கல்விச் சமூகத்திற்கு இதன் பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது.

    இந்த மாநாட்டிற்கு சிமாட்ஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பது கல்லூரியின் ஆராய்ச்சி பணிகளுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.