ராணிப்பேட்டை, பிப். 15 - முழுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் வி.அமிர்தவள்ளி தலை மையில் ராணிப்பேட்டை திட்ட அலுவலரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே விடுப்பு எடுத்தனர். ஆனால் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தத் தொகையை வழங்கம் வேண்டும். காய்கறி, மளிகை பொருட்க ளுக்கான தொகையை அவ்வப்போது வழங்க வேண்டும், ரசீதில் உள்ளபடி சமை யல் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும் எந்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் சிஐடியு வேலூர் - திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் அ.தவராஜ், பொருளாளர் கே.மாலதி, ஒன்றியச் செயலாளர் எஸ்.செந்தாமரை, ஒன்றிய தலைவர் வி.சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.