districts

img

நீட், கியூட் நுழைவுத்தேர்வு ஒன்றிய அரசின் அறிவிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சென்னை பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு நீட், கியூட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் புதனன்று (ஏப்.27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகத்தின் கிளைச் செயலாளர் அருண் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  மாநில துணைத் தலைவர்  நிருபன் சக்கரவர்த்தி மாவட்ட நிர்வாகிகள் மிருதுளா, விக்னேஷ், மாநிலக் கல்லூரியின் கிளைச் செயலாளர் தமிழ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.