இந்தி திணிப்புக்கு எதிராக செவ்வாயன்று (அக்.18) சென்னை மாநகராட்சி விருகம்பாக்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆன்ந்த், செயலாளர் ஆர்.பாரதி ஆகியோரை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையம் முன்பு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டதையடுத்து மாணவர் சங்கத் தலைவர்களை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி எல்என்ஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாயன்று (அக்.18) இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆ. டிக்சன் தலைமையில் மாநில துணைச் செயலாளர் சம்சீர்அகமது,மாவட்டத் தலைவர் ஆர்.ஸ்வேதா, மாநிலக்குழு உறுப்பினர் எம். லட்சுமி சேகல், மற்றும் ஆர்த்தி, ராகேஷ், சாந்தினி உட்பட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.