districts

img

திருவொற்றியூர் 4ஆவது வார்டில் கால்வாய்களின் மேல் பகுதியை மூடும் பணி தொடக்கம்

சென்னை, ஜன. 9- எர்ணாவூர் மாகாளி யம்மன் கோயில் 2, 3 தெருக்களில் உள்ள கால்வாயை சீரமைத்து மேல் மூடி அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பி னர் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டு மாகா ளியம்மன் கோயில் 2 மற்றும் 3ஆவது தெருக்களில் பக்க கால்வாய் 5 ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப் பட்டது. திறந்த கால்வாயாக இருந்ததால் கொசுக்கள் அதிகரித்து அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் பல இடங்களில் கால்வாய் பழதடைந்து இருந்தது.  திறந்த கால்வாய் மீது மூடி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து  ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதையடுத்து கால்வாய் களை சீரமைத்து, ஸ்லாப் மூலம் மூடும் பணியை மாமன்ற உறுப்பினர் வியாழனன்று (ஜன. 9) தொடங்கி வைத்தார்.  இதில் சிபிஎம் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பின. வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.