districts

img

பின்தங்கிய அரசு பள்ளிகளில் நூலகங்கள் கட்ட முடிவு

சென்னை, ஜூன் 28-

    சென்னையில் பின்தங்கிய  20க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  நூலகங்கள் கட்ட ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜென் கிளை முடிவு செய்துள்ளது.

    இந்த சங்கத்தின்  புதிய தலைவராக டாக்டர் சி.ஏ. அபிஷேக் முரளி மற்றும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக் முரளி தொழிலாளர்களுக்கு சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிதி முகாம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள்  விளக்கினார்.  

     இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக மத்திய வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பி.செல்வகணேஷ் கலந்து கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் வருமான வரியின் பங்கு குறித்து பேசினார். ரோட்டரி மாவட்ட கவர்னர் என். எஸ். சரவணன், செயலாளர் யஷ்வர்தன் பல்சானி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜென் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.