districts

img

பன்றிகளால் மர்ம நோய் : கொத்தங்குடிதோப்பு மக்கள் பாதிப்பு

சிதம்பரம்,டிச.7- கொத்தங்குடி தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியரிடம் புகார் செய்யப்பட்டது. அண்ணாமலை நகர் கொத்தங்குடி தோப்பு மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சிர்  ரவியை சந்தித்து மனு அளித்தனர்.  அந்த மனுவின் விவரம் வருமாறு:- அண்ணாமலைநகர் கொத்தங்குடி தோப்பு குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது.  இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்களும் மர்ம நோயால் பாதித்து வருகிறார்கள்.  இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரக் குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, நகரச் செயலாளர்  ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து மற்றும் பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

;