சென்னை, ஜூலை 31- மின்சார வாரியம் தனியார் மயமானால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் கூறினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் 17ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் நடை பெற உள்ளது. அதையொட்டி “மின் துறை ஏன் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும்” என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மேற்கு கிளை தலைவர் எஸ்.தசரதன் தலைமையில் அம்பத்தூரில் சனிக்கிழமை (ஜூலை 30) நடைபெற்றது. இதில் மகேந்தி ரன் பேசுகையில், மின்சார வாரியம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்க ளுக்கு மின்சாரத்தை வழங்கக் கூடிய நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கி றது. பொதுத்துறை நிறுவனமாக செயல்படக் கூடிய காரணத்தினால்தான் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கக் கூடிய பல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்றால் அதற்கு காரணம் மின்சார வாரியம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருப்பது தான். ஆனால் ஒன்றிய அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சி யாக மின்சார சட்டம் 2021ஐ கொண்டு வந்து, மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
மின்சார வாரியம் தனியார்மயமானால் அதிகமாக மின்சாரம் பயன்படுத்து வோருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது. வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் கிட்டாமல்போகும். ஏழை எளிய மக்கள், விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மின் ஊழியர் மத்திய அமைப்பு போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு வணிகர்க ளும், பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்தி ரன் உள்ளிட்ட வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார், மேற்கு கிளை தலைவர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், பொருளாளர் சி.அஜித் குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். முன்னதாக நடைபெற்ற புதுகை பூபாளம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது.