தொழிற்சங்கம் அமைத்தற்காக பழிவாங்கப்பட்ட என்எஸ்கே பேரிங்ஸ் மற்றும் மெண்டார் பிரிண்டிங்ஸ் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் அருகே ஒரக்கடத்தில் மனித சங்கிலி நடைபெற்றது. பொதுத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.ெஜனிட்டன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு தலைவர் டி.ஸ்ரீதர், நிர்வாகிகள் பி.ரமேஷ், ஜி.வசந்தா, எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.