தற்போது உயர்த்தப்பட்ட தராசு முத்திரைக் கட்டணம் மற்றும் அபராதக் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனை சந்தித்து மனு அளித்தார். உடன் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் ஒய்.எட்வர்ட், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் உள்ளனர்.