districts

சென்னை முக்கிய செய்திகள்

மெரினாவில் குப்பை கொட்டினால்  அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை,ஜன.21-  மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கிய விவகாரத்தில், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையில் ஏராளமானோaர் குவிந்த னர். இதனால், கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக மாறியது. இந்த விவ காரம் தொடர்பாக தாமாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, தனக்கு வந்த இரு புகைப்படங்களை சுட்டிக்காட்டி, மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி குப்பை கூளமாக்கியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகநாதன், குப்பை கொட்டுவதை குற்றமாக கருதி, அப ராதம் விதிக்காவிட்டால் இதை தடுக்க முடியாது எனவும், படித்தவர், படிக்காத வர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், குப்பையை வீசிச் செல்வதாக தெரி வித்தார். இதையடுத்து, குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க வலியுறுத்திய தீர்ப்பாயம், இது குறித்து சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மூதாட்டியிடம் வழிபறி

செங்கல்பட்டு, ஜன. 21- செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் அருகே உள்ள கூடலூர் கிரா மத்தைச்சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இரண்டு சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.  வழிப்பறி செய்த நபரை 24 மணி நேரத்தில் மேல்மரு வத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் சென்னையை சேர்ந்த சஞ்சய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர் அச்சிறுப்பாக்கம் மது ராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்ப வங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் போலீசார் சென்னையை சேர்ந்த சஞ்சயை கைது செய்து மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

பள்ளம் தோண்டியபோது எரிவாயு விநியோக குழாயில் சேதம்

திருபெரும்புதூர், ஜன.21- ஒரகடம் அருகே மின்சார கேபிள்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது ஏஜி அன்ட் பி பிரதம் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் விநியோக குழாயில் சேதம் ஏற்பட்டது.  ஒரகடம், பண்ருட்டி, ஒலிவாஸ் பீனிக்ஸ் நகரம் அமைந்துள்ள பகுதியில் உள்ள  மெயின் ரோட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக கேபிள்கள் பதிக்க தனியார் ஒப்பந்த நிறுவனம் அப்பகுதியில் பள்ளம் தோண்டியது. எரிவாயு நிறுவனத்தின் எச்சரிக்கை பலகையையும் பொருட்படுத்தாமல் அஜாக்கிரதையாக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த இந்நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிவாயு குழாயை சீரமைத்து பெரும் விபத்தை தவிர்த்து அப்பகுதி மக்களுக்கு சீரான எரிவாயு விநியோகத்தை வழங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் நகராட்சி அல்லது நகர எரிவாயு விநியோக நிறுவனத்திற்கு முன்கூட்டியே 91 8056847333/1800-2022-999 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் 89 ரவுடிகள் கைது

ஆவடி, ஜன. 21- ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஆவடி புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்த ரவுடி தினேஷ் (20) என்ப வர் முன்விரோதம் காரணமாக கடந்த 5ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (29) என்ப வர் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி பட்டா பிராம் பகுதியைச் சேர்ந்த இரட்டை மலை சீனிவாசன், அவரது தம்பி ஸ்டாலின் ஆகி யோர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.இதை யடுத்து ஆவடி காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 17 பழைய குற்ற வாளிகள் மற்றும் ரவுடிகள் கைது செய்யப் பட்டனர். மேலும் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் மொத்தம் 72 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, 16 ரவுடிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியும், 45 ரவுடிகள் நடத்தையின் அடிப்படையில் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 11 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டது.

மூத்த குடிமக்களுக்கான  புதிய குடியிருப்பு திட்டங்கள்

சென்னை, ஜன.21-  ஜிடி பாரதி அர்பன் டெவலப்பர்ஸ் நிறுவனம், சென்னையில் உள்ள மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக வாழ எலிமென்ட்ஸ் என்னும் பெயரில்   எலிமென்ட்ஸ் சத்வா, எலிமென்ட்ஸ் கமலம் என்னும் 2 புதிய குடியிருப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு காலத்தை மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்திடும் வகையில் அவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் இந்த குடியிருப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  போரூர் பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்காக எலிமென்ட்ஸ் சத்வா   கட்டப்படவுள்ளது.  இந்நிறுவனம் எலிமென்ட்ஸ் 2 என்னும் பெயரில் ஆலப்பாக்கத்தில் கட்டி முடித்துள்ள குடியிருப்புகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.  போரூரில் கட்டப்பட உள்ள குடியிருப்பு, மூத்த குடிமக்கள் நகரத்திற்குள்ளேயே எந்தவித இடையூறும் இல்லாமல் அமைதியான மற்றும் நிறைவான ஓய்வுகால வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்று நிறுவனத்தின் இயக்குநர் அஸ்வின் குமார் கூறினார். மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளை வாங்கும் செலவில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தி வீட்டை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். வாடகை பணத்தை சேமித்துவைத்து அதை மீதமுள்ள தொகைக்கான மாத தவணையாக வங்கிக்கு செலுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை

சென்னை, ஜன 21- தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வசித்தவர் ஆட்டோ ஓட்டுநர் அஜய் (29). இவரது மனைவி (பிரியா). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவரும் கலப்புத் திருமணம் செய்துள்ளனர். இவர் திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரியாவின் சகோதரர் ஆட்டோ டிரைவர் அன்புச்செல்வன் (31) அவரை கடுமையாக தாக்கி, தான் கொண்டு வந்த கத்தியால் வேகமாக அஜய் கழுத்தை அறுத்தார். குடும்பத்தினர் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதில் சம்பவ இடத்திலேயே அஜய் பலியானார். அன்புச்செல்வன் நேரடியாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்த உதவி ஆய்வாளர் பிரவீனிடம் சரணடைந்தார். இதுகுறித்து ஆர்.கே. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததாக அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மரம் விழுந்து கீரை வியாபாரி பலி

கடலூர், ஜன.21 – இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த கீரை வியாபாரி மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (60)  இவர், விருத்தாசலம் உழவர் சந்தையில் கீரை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று, கீரை  வியாபாரத்தை முடித்துக் கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, விருதாச்சலத்தில் உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கோ.பூவனூர் கனரா வங்கி அருகே சாலை ஓரமாக இருந்த ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து விநாயகம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி உயிரிழந்தார். பின்னர், இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடுக்கல் வாங்கலில் வாலிபர் படுகொலை

கடலூர், ஜன.21- நெய்வேலி அருகே கொள்ளிருப்பு கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை நெய்வேலி தெர்மல் போலீசார் பிடித்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட பாலாஜி (30). விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.

தவில் விநாயகம் தாயார் காலமானார்

புதுச்சேரி, ஜன.21- புதுச்சேரி மதகடிப்பட்டை சேர்ந்த வெ.சந்தியம்மாள் காலமானார். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கமிட்டி உறுப்பினர் புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் தவில் கலைஞர் விநாயகத்தின் தாயாராவார்.  மதகடிப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தியம்மாள் உடலுக்கு கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜாங்கம்,வெ. பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அரசு கவின் கலை கல்லூரிக்கு ரூ.21 கோடியில் 3 புதிய கட்டிடங்கள்

சென்னை,ஜன.21- சென்னை பெரியமேட்டில் உள்ள  தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரி யில் மேற்கொள்ளப்பட்டு வரும் புன ரமைப்பு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.  அப்போது, ரூ.21 கோடியில் 3 புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரி, ஆறு பிரிவுகளைக் கொண்டு ஏறத்தாழ 175 ஆண்டு காலம் நிறைவடைந்து 176வது ஆண்டில் அடி யெடுத்து வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், ஏற்கெனவே இருந்த பழைய கட்டிடங்களை எல்லாம் புதுப்பி க்கின்ற வகையில்  புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இது மட்டுமல்லாமல் 3  புதிய கட்டிடங்கள் சுமார் 53,300 சதுர அடி பரப்பளவில் ரூ.21 கோடி மதிப் பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருக்கிறது. இதன்  பிறகு விரைவில் பணிகள் தொடங்கி நடைபெற இருக்கிறது. இக்கல்லூரி யில் 481 மாணவர்கள் பயின்று வரு கின்றனர். சென்னையில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரி  மீண்டும் புதுப் பொலிவு பெறுவதற்கு பணிகள் நடை பெற்று வருகின்றது. தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் 2 பழையக் கட்டிடங்களின் புனரமைப்பு பணிகளும் மார்ச் மாதம் முடிவடைவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது. புதிய கட்டிடங் களுக்கு ஒப்பந்தப் புள்ளிகோரி அப்பணி கள் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கும். நம்ம ஊரு திருவிழாவுக்கு அமோக வரவேற்பு  சென்னை நம்ம ஊர் திருவிழா விற்கு மிகப்பெரிய வரவேற்பை அளித் திருக்கிறது. மக்கள் அதிக அளவு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது போன்று மற்ற மாவட்டங்களிலும் நடத் தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு திருநெல்வேலி, மதுரை, கோவை, உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பரி சீலனையில் உள்ளது. வள்ளுவர் கோட்டம், மார்ச் மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. ராஜாஜி ஹால் மே மாதம் இறுதியில் நடைபெறும். இவ்வாறு கூறி னார்.

கைவிடப்பட்ட வாகனங்கள், தேவையற்ற மின் கேபிள்கள் அகற்றம்

சென்னை, ஜன.21- சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் முழுவதும் உள்ள நடை பாதைகளை பாதசாரிகள் பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையில்  தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள் ளும் நடவடிக்கைகள் திங்களன்று (ஜன.20) தொடங்கி நடைபெற்றது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜன.20 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை இரவு நேரங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்  திங்களன்று இரவு தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணியின் போது, நடை பாதைகளில் உள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகள், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப் பட்ட வாகனங்கள், தேவையற்ற இன்டர்நெட் மற்றும் மின்கேபிள்கள் அகற்றுதல், பாதசாரிகளுக்கு இடையூ றாக உள்ள பிற பொருட்களை அகற்று தல், சாலையோர மின்விளக்குகளை மறைக்கும் வகையில் உள்ள மரக்கிளை களை அகற்றுதல், நடைபாதைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணி நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற் றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முகம் மாமணியும் சிகரம் செந்தில்நாதனும் என்னை ஊக்கப்படுத்தியவர்கள்   சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதி பேச்சு

சென்னை,ஜன.21- சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வான ஆய்வாளர் ஆ.இரா.வேங்க டாசலபதிக்கு சென்னை கே.கே.நகர் இலக்கிய வட்டத்தின் சார்பாக, சமீபத் தில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. இலக்கிய வட்டத்தின் செயலாளர் பெ.கி.பிரபாகரன், 44 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நட்பின் தொடர்ச்சியை எடுத்துரைத்து, வேங்கடாசலபதி இன்று பெற்றுள்ள வளர்ச்சியை குறிப்பி ட்டார்.  முகம் மாமணி இளைஞர்களை தெரிந்தெடுத்து முகம் இதழில் எழுதவைத்தார். அதன் தொடர்ச்சியே இந்நிகழ்ச்சியின் அடித்தளம் என்றும் அவர் குறிப்பிட்டார். மூத்த வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் பேசுகையில், வேங்கடாசலபதி மாண வராக இருந்தபோது தன்னைச் சந்திக்க வந்த காலகட்டத்திலே அவர் மிகச் சிறந்த அறிஞராக வருவார் என்பதை பல கூட்டங்களில் கூறியதை நினைவுபடுத் தினார்.  இன்று அவரது வளர்ச்சி சமுதா யத்திற்குப் பயன்படுவதை எண்ணி பெருமைப்படுவதாக கூறினார்.  மேலும் அவர் பேசுகையில் ஒவ்வொரு முறை யும் சாகித்ய அகாடமி விருது வழங்கும் போது பல விமர்சனங்கள் எழுவதை சுட்டிக்காட்டி வேங்கடாசலபதியும் அதி லிருந்து தப்பவில்லை என்றாலும் இவருக்கு வந்த விமர்சனம் குறை கூறி அல்ல; அவருடைய சிறந்த படைப் புகள் பலவற்றில் ஏதாவது ஒன்றிற்கு வழங்கி இருக்கலாமே என்ற போக்கில்தான் என்றும் குறிப்பிட்டார். மாற்றம் ஏற்பட காரணமானவர்கள் ஏற்புரையாற்றிய ஆ.வேங்கடா சலபதி, முகம் மாமணி  இலக்கிய வட்டத்தை தொடங்கிய பொழுது மாதம்  ஒரு அறிஞரை பேச அழைப்பார்.  அப்படி வந்தவர்கள் பலர் மிகச் சிறந்த எழுத்தா ளர்கள். நாரண.துரைக்கண்ணன், அப்பாதுரையார், ஜெயகாந்தன், பெ.நா.அப்புசாமி, த. கோவேந்தன், தொ.மு.சி ரகுநாதன் போன்றவர்களை மறக்கமுடியாது.  அவர்களுடன் பழகு வதற்கும், படைப்புகளை படிப்பதற்கும் மாமணி வழிகாட்டினார்.  குறிப்பாக, புதுமைப்பித்தன் கதைகளைக் கொடுத்து பேசச் சொன்னார்.  அது தொடங்கி, மிகப்பெரிய மாற்றம் என்னுள் ஏற்பட்டது.இதனை இன் றைய இளைஞர்களுக்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  ந.சி. இராஜவேலு, சண்முக வேலாயுதம், பெகி.பிரபாகரன் இவர்களோடு அருகில் உள்ள பாரதிதாசன் குடியி ருப்பில் சைக்கிள் கொட்டகையில் கூட்டம் நடத்திய நாள்கள் பசுமை யானவை. முகம் இதழை நாங்கள் 16 பக்கத்தில் தொடங்கிய பொழுது அதன் முதல் உறுப்பினர் செந்தில்நாதன்.  சிகரம் இதழ் நின்று போன காலகட் டத்தில் முகம் வருவதை அவர் வர வேற்று ஊக்கப்படுத்தினார்.  இன்றைய முகம் ஆசிரியர் இளமாறனும், இலக்கிய வட்டத்தின் செயலாளர் பிர பாகரனும் மாமணியின் வழிகாட்டலில் என்னைப் போன்றே வளர்ந்தவர்கள் என்று கூறி தன்னைப் பாராட்டிய அனை வர்க்கும் நன்றி தெரிவித்தார். கே.கே நகர் இலக்கிய வட்டம் சார்பில் அதன் 493 ஆவது கூட்ட நிகழ்வு ஆ.இரா.வேங்கடாசலபதிக்கான பாராட்டு நிகழ்வாக நடைபெற்றது. சண்முக வேலாயுதன், பேராசிரியர் ய.மணிகண்டன்,முகம் ஆசிரியர் இள மாறன் உள்பட பலர் வாழ்த்திப் பேசி னர்.