கிருஷ்ணகிரி,ஜன.29- கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி அருகில் உள்ள அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினரும் கல்லூரி யின் நிறுவனத் தலைவருமான முனைவர் மு.தம்பிதுரை தலைமை வகித்தார். திரு வாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் எம்.கிருஷ்ணன், வேளாங்கண்ணி பள்ளிகள் குழும தலைவர் கூத்தரசன், கல்லூரி செய லாளர் சுரேஷ்பாபு, பாலகிருஷ்ண ரெட்டி, சிவி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இளங்கலை பட்டப் பிரிவில் 850 மாணவர்களுக்கும், முதுகலை பட்ட பிரிவு 550 பேருக்கும் ஆய்வியல் நிறைஞர் பட்ட பிரிவில் 125 பேருக்கு பட்டங்களை வழங்கினார். முதல்வர் தனபால் நன்றி கூறினார்.