கடலூர், நவ.21 – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15-வது மாவட்ட மாநாடு கடலூரில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் டி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வெங்கடாஜலபதி வரவேற்றார். மாநிலச் செயலாளர் சா.கோதண்டபாணி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எல்.அரி கிருஷ்ணன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வெங்கடேசன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமை களை வழங்க வேண்டும். சாலை பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணி யிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் மாவட்ட துணைத் தலை வர் பாலகிருஷ்ணன், இணைச் செய லாளர்கள் ரவி, காந்தி, மாநில செயற்குழு லெனின், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் புருஷோத்தமன், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் சங்க மாநிலத் தலைவர் அனுசியா, மாவட்டச் செயலாளர் பாபு, குலோத்துங்கன், காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலப் பொருளாளர் பாஸ்கரன் நிறை உரை யாற்றினார். இணை செயலாளர் பொற்செழியன் நன்றி கூறினார். மாவட்டக்குழு நிர்வாகிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.வெங்கடாஜலபதி, செயலாளராக எஸ்.பாலகிருஷ்ணன், பொருளாளராக டி. வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.