districts

போலீஸ் சித்ரவதையால் பலியான சுப்பிரமணி குடும்பத்துக்கு அரசு நிவாரணம்: சிபிஎம் வரவேற்பு

கடலூர், டிச.24- போலீசாரின் சித்ரவதையில் உயிரிழந்த பி.என்.பாளையம் சுப்பிரமணி குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணத்தை அரசு  வழங்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் பி.என்.பாளையம் சுப்பிர மணி (35) விசாரணைக்காக நெய்வேலி நகர காவல் துறையினர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி இரவு 2 மணிக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமான காவல் நிலையத்தில் அடைத்து வைத்து 8 நாட்களாக அடித்து, சித்ரவதை செய்து கொடு மைப்படுத்தினர். மரண மடையும் தருவாயில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிக்சை பலனின்றி இறந்து விட்டார். ஆதிதிராவிட வகுப்பு சேர்ந்த சுப்பிரமணிக்கு ரேவதி என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளன. இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதி கேட்டு சிபிசிஐடி விசாரணை கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தியது. பிறகு, சுப்பிரமணியின் மனைவி ரேவதியும் சென்னையில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அவரின் தலைமையில் கடலூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.   கடலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 6 ஆண்டுகள் கடந்தும் விசாரணை நடைபெறவில்லை. சம்மந்தபட்ட காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காலம் கடத்தி வந்தனர். ஆனால் குற்றத்தில் சம்மந்தபட்ட காவல்துறையினர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்குற்றத்தில் சம்மந்தப்பட் டவர்கள் அனைவரும் தொடர்ந்து காவல் துறையில் பணியாற்றி வருகிறார்கள். இறந்தவர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிந்தும் சிபிசிஐடி போலீசார் எஸ்சி,எஸ்டி சட்ட பிரிவையும் சேர்க்கவில்லை. குடும்பத்திற்கு நிவாரணமும் வழங்கவில்லை. இந்த நிலையில், எஸ்சி-எஸ்டி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு,  ரூ.30 லட்சம்  நிவாரணம் வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இத்தொகையை வழங்க மறுத்தி அதிமுக அரசு, உச்ச நீதி மன்றத்திற்கு சென்றது. ஆட்சிமாற்றத்திற்கு பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது இந்த லாக்கப் மரணம் தொடர்பான விசாரணை கிடப்பில் இருந்ததையும், நிவாரணம் வழங்காமல் உள்ளதால் சுப்பிரமணியின் மனைவி ரேவதி மற்றும் 4 குழந்தைகளும் வறுமை யில் வாடியதையும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.   அதனடிப்படையில், முத லமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கையால், உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட ரூ. 30 லட்சத்தை ரேவதி மற்றும் 4 குழந்தைகள் பெயரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டெபாசிட் செய்தார். மேலும், வழக்கும் எஸ்சி-எஸ்டி பிரிவை விசாரணை செய்யும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  இப்பிரச்சனையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கடலூர் மாவட்டக்குழு வர வேற்கிறது. இவ்வழக்கி விசா ரணையை துரிதப்படுத்தி குற்ற வாளிக்கு தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ஆறுமுகம் தெரித்திருக்கிறார்.