districts

img

சென்னை கடற்கரைக்கு அடித்து வரப்படும் குப்பைகள்

சென்னை, டிச. 24- சென்னை கடற்கரையில் ஆறுகள் மூலம் சென்ற குப்பைகள் கரை ஒதுங்கி வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் நீர்நிலைகளில் குப்பை களை கொட்ட வேண்டாம் என மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. சென்னையில் கடந்த 4-ந் தேதி மிக்ஜாம் புயல் காரண மாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரண மாக சென்னையில் உள்ள முக்கிய ஏரிகள் திறந்து விடப்பட்டன. இந்நிலையில் இந்த ஏரிகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் ஆற்றில் கலந்து சீறிப்பாய்ந்தன. இந்நிலையில் ஆற்றில் ஏற்கனவே பிளாஸ்டிக் போன்ற குப்பைகளும் கடலுக்குள் அடித்து செல்லப் பட்டன. இந்நிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சென்னை தற்போது புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. ஏற்கனவே புயல் பாதிப்பின் போது குப்பை கள் அனைத்தும் சாலைக ளில் மலை போல் குவிந்தது. இதனை மாநகராட்சி ஊழி யர்கள் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். இந்நிலை யில் ஆறுகள் மூலம் கட லுக்குள் சென்ற குப்பை கள் அனைத்தும் கரை ஒதுங்கி வருகின்றன. இது அனைத்தையும் மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரு கின்றன. கண்ணாடி பாட்டில் கள் பிளாஷ்டிக் பாட்டில் கள் குப்பைகள் என அனைத்தும் கரை ஒதுங்கி வருவதால் கூடுதல் பணியாளர்களை வைத்து சுத்தம் செய்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் அடித்து வரப்பட்ட குப்பைகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை ஊழியர்களுடன் இணைந்து அகற்றினார்.  எனவே மக்கள் நீர்வழித்தடங்களில் குப்பைகளை போட வேண்டாம் என மாநக ராட்சி சார்பில் மக்களுக்கு வேண்டுகோள் விடப் பட்டுள்ளது.