விழுப்புரம், அக். 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.கோவிந்தசாமி (77) வியாழனன்று (அக். 19) காலமானார். கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிஐடியு மாவட்டத் தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி, செஞ்சி இடைக் கமிட்டி செயலாளர் என பல தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர் சி.கோவிந்தசாமி. இவர் மின்சார வாரியத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்ந்து, பின்னர் நிரந்தர ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். 1971ஆம் ஆண்டு தன்னை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு, கட்சி, தொழிற்சங்க வளர்ச்சிக்காக தனது இறுதிமூச்சு வரை பாடுபட்டார். சிறுபான்மை மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய போது, அதனை தடுக்க முயன்ற கோவிந்தசாமி காவல் துறையினரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானார். அவரது உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதா கிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, சு.வேல்மாறன், வட்ட செயலாளர்கள் ஆர்.கண்ணப்பன், ஏ.சகாதேவன், டி.முருகன், காணை ஒன்றியச் செயலாளர் பி.சிவராமன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், துணைத் தலைவர் கே.மாதவன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி, கோட்டச் செயலாளர் ஆர்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் கே.வீரமணி, மின் ஊழியர் ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், அன்பழகன், தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி வெள்ளி யன்று (அக். 20) காலை 9 மணிக்கு நடை பெறவுள்ளது. அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், உமாநாத், ஜோதிபாசு ஆகிய இரு மகன்களும், சுசிலா என்ற மகளும் உள்ளனர்.