வேலூர், நவ 25 - வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் உயர்கல்வி அறக் கட்டளை சார்பில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற கல்வி உதவித் தொகை வழங்கும் விழா விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடை பெற்றது. அறக்கட்டளை நிர்வாகி மயிலாம் பிகை குமரகுரு வரவேற்றார். செயலாளர் ஜெ.லட்சுமணன், பொருளாளர் ஜவகர்லால் ஜெயின், மரு.நர்மதா அசோக், அஞ்சு சக்திவேல், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.தேவராஜ், என்.பாஸ்கரன், இரத்தின நடராசன், ருக்ஜி ராஜேஷ்குமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்தி கேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு 722 மாணவர்களுக்கு ரூ. 62 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிச்சாண்டி பேசுகையில், கல்வி ஒன்று தான் ஒருவரை உயர்ந்த இடத்தில் சேர்க்கும். அத்தகைய நிலையை நமது மாவட்டத்தில் உரு வாக்கியவர் கோ.விசுவநாதன். வேலூரின் பெருமை சிஎம்சி என்று இருந்ததை மாற்றி விஐடி பல்கலை கழகத்தை உரு வாக்கியுள்ளார் என்றார். வட மாநிலங்கள் உயர்கல்வியில் 27 விழுக்காடு. ஆனால். தமிழ்நாடு 50 விழுக்காடு எட்டியுள்ளது. அதில் நமது மாவட்டங்கள் கல்வியில் 100 விழுக்காடு சிறந்த விளங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளைக்கு வேலூர் மாவட்ட பிரமு கர்கள், வணிகர்கள் மற்றும் விஐடி பல்கலைக் கழக பேராசிரியர்கள், நிர்வாக பணி யாளர்கள் நிதியுதவி வழங்கினார்.