சென்னை, மே 18- தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்க டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தயாராக உள்ளது. குரூப் 4 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கு எட்டு வார காலமே பயிற்சிக்கு உள்ளதால் பயிற்சி வகுப்புகள், தொழில் நுட்ப ரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள், மாதிரி தேர்வும் அதையொட்டிய மாணவர்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்யும் வகையில் கலந்துரையாடல் வடிவத்திலேயே இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரி யர்களும் ஆலோசனைகளை வழங்குவார்கள். இவ்வகுப்புகளை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தவுள்ளது. சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் வாரந் தோறும் நடக்கும். பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்களது தற்போதைய புகைப்படம் மற்றும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்ததின் நகலை கொண்டு வர வேண்டும். தவறும் மாண வர்கள் வகுப்பினுள் நுழைய அனுமதியில்லை. மாணவர்கள் குரூப் 4 தேர்வில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு கட்டணம் உண்டு. பயிற்சி நடைபெறும் இடம். சிஐடியு அலுவலகம். நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம்., ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001. பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சென்னை மையம்: கங்காதரன் - 94442 14696 வாசுதேவன். 94446 41712.