வந்தவாசியில் தையல் கலை தொழிலாளர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தையல் கலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வரதனிடம் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் காதர், வந்தவாசி நகர நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.