districts

img

பழங்குடி பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி

சிதம்பரம், ஜன.11- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடி  யினர் நலத்துறை, தமிழ்நாடு  அரசு  மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கொல்லிமலை இணைந்து இந்தியா சியாட்டில் குழு  அமெரிக்க உதவியுடன் பழங்குடியின பெண்க ளுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி தொடக்க  நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்றது. இந்த பயிற்சித் திட்டத் திற்கு பல்கலைக்கழக முனைவர் பாலமுருகன்  வரவேற்றார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர்  பேராசிரியர். என்.புவியரசன் திட்டத்தை  துவக்கி வைத்து பேசுகை யில், “ இந்த பயிற்சி பழங் குடி பெண்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உரு வாக்க உதவுகிறது”என்றார். இதனை தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பாலமுரளிதரன். பழங்குடி இன கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காளியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார். முனைவர்கள் பிரவீனா, சாய் லீலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.