டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
கடலூர், டிச.8 - கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிச. 20 முதல் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடை பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். டிச. 11 முதல் 19 வரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
தோட்டக்கலை துறை கருத்தரங்கு
கிருஷ்ணகிரி, டிச.8 - ஓசூர் ஒன்றியம், பேரண்டப்பள்ளி ஊராட்சியில் உள்ள சர்வதேச பன்னாட்டு மலர் மற்றும் ஏல மையத்தில் தோட்டக்கலை துறை சார்பாக கொய்மலர் சாகுபடி தொடர்பான கருத்தரங்கு, உற்பத்தியாளர்கள் வணிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்தார். ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் முன்னிலை வகித்தார். தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் பூபதி, பையூர் தோட்டக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் அனீஸ் ராணி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், வேளாண் உதவி இயக்குநர் பிரபாகர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி நிதி
சென்னை, டிச.8 - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும் பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக்ஜம் புயலால் இந்த 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகள் சேதமடைந் துள்ளன. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் சீரமைக்கவும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வும் மாவட்டத்திற்கு தலா ரூ. 25 லட்சம் வீதம் ரூ. 1 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித் துள்ளது. வருகிற திங்கட்கிழமை (டிச. 11)முதல் பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில் பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணி கள், சேதமடைந்த அவற்றை சரி செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன.
சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை, டிச.8- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக் கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்.23 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடை பெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப் பட்டு 2000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்றது. அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். தற்போது பருவ மழைக் காலமாக உள்ள காரணத்தினால் முதல்வரின் உத்தரவுப்படி சனிக்கிழமை (டிச.9) மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திரு வள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெறும். மேலும், சென்னை சைதாப்பேட்டை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோதா மேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.