districts

img

ஆயிரம் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

திருவள்ளூர்,ஆக.17- பழங்குடியின மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று  மெய்யூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த  20 பழங்குடியின மாணவிகளுக்கு மிதிவண்டி களை எய்டு இந்தியா செயலாளர் முனைவர்  பாலாஜிசம்பத்,  எய்டு இந்தியா நிர்வாகி  கோமதி,  ஊத்துக்கோட்டை காவல்துறை  துணை கண்காணிப்பாளர் கே.கணேஷ் குமார், மருத்துவர் விக்ரம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, ஒன்றிய கவுன் சிலர் தேன்மொழி ஆகியோர் வழங்கினர். தலைமை ஆசிரியர் கே.ஆர்.கோவிந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில்  துணைத் தலைவர் மீனா பிரகாஷ், லலிதா பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக  பொருளாளர் கெஜபதி, துணைத் தலைவர்  ஆர்.முருகன், டி.டில்லி, உள்ளிட்டோடர் கலந்துகொண்டனர். அனைத்து மாணவர் களுக்கும் நோட்டு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது.