districts

img

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவையை வழங்குக! அனைத்து ஓய்வூதியர் அமைப்புகள் போராட்டம்

சென்னை, மே 31 - போக்குவரத்து  ஓய்வூதியர்களுக்கு 78  மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க  கோரி செவ்வாயன்று (மே 31) பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்துக் கழகத்தில் 86 ஆயிரம் ஓய்வூதியர்கள், 12 ஆயிரம் குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்க ளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப் படியை உயர்த்த வேண்டும். அதன்படி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வில்லை. அதாவது, கடந்த 78 மாதத்தில் அகவிலைப் படியாக சுமார் 1700 கோடி ரூபாயை அரசு வழங்காமல் உள்ளது. இந்த  நிலுவைத் தொகையை வழங்க கோரி  ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை  ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக்குழு - சென்னை சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை உடனடி யாக செயல்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் 7850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களை போன்றே 300  ரூபாய் மருத்துவப்படி வழங்க வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி முதல் தேதி யன்று ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2022  மே முதல் 2021 ஜூன் வரை ஓய்வு பெற்றவர்க ளுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபெல் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் கே.ராகவேந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மண்டலச்  செயலாளர் எஸ்.கணேசன், பிஎஸ்என்எல்-ஏஐபிபிடிஏ மாநிலச் செயலாளர் வீரா.குப்பன், மாவட்டச் செயலாளர் டி.கோதண்டம், என்சிபிபிஏ தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சி.கே.நரசிம்மன், எம்.எல்.பெருமாள், என்.சுந்தரம் ( தமிழ்நாடு வருமான வரித்துறை ஓய்வூதியர் சங்கம்), என்.ராமசாமி (தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்), கு.பூபாலன் (தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம்), என்.பரமச்சந்திரன் (சென்னை பெருநகர குடிநீர்  வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஓய்வு பெற்றோர் நலச் சங்கம்), கு.வீரராகவன்,  ஏ.முத்துக்குமார் (தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு), எம்.ஆர்.மீனாட்சிசுந்தரம் (அனைத்திந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூ தியர் சங்கம்) உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.