districts

வரி கட்டாதவர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை,ஏப்.1- சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படஉள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வரி வரு வாய்களில் சொத்துவரியும், தொழில் வரியும் முக்கிய அங்கமாக உள்ளது. வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் என மொத்தம் 13 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக்கூடியவர்கள் உள்ளனர். ஏப்ரல் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை யிலான 2021-22 நிதியாண்டிற்கான சொத்து வரி. தொழில் வரி வசூலிப்பதற்கான காலக்கெடு வியாழனன்று  முடிந்தது. சொத்து வரி இலக்கு ரூ.750 கோடி களாகவும், தொழில்வரி இலக்கு ரூ.447 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வருவாய் துறை யினர் கடந்த 2 மாதமாக வரி வசூலை தீவிரப்படுத்தினர். சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும் வார்டு அலுவலகங்களிலும் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டன. வியாழன்று நள்ளிரவு 12 மணியுடன் சொத்துவரி, தொழில்வரி ஆன்லைன் வழி யாக வசூலிக் கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக சொத்துவரி வசூ லானது. சொத்துவரி ரூ.777 கோடியும், தொழில்வரி ரூ.456 கோடியும் வசூ லிக்கப்பட்டன. சொத்துவரி ரூ.22 கோடி அதிகமாகவும், தொழில்வரி ரூ.9 கோடி அதிகமாகவும் வசூலாகியுள்ளது. வெள்ளி முதல் 15ஆம் தேதி வரைக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.