districts

img

இன்று முதல் மீண்டும் இயங்கும் பறக்கும் ரயில் சேவை

சென்னை, அக்.28- சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவைகள் செவ்வாய் முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை- வேளச்சேரி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்றும் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.