districts

img

அரசு பணியை காட்டி மீனவர்களின் நிவாரணங்களை பறிக்க எதிர்ப்பு

சென்னை, டிச. 23 - அரசுப் பணியை காரணம் காட்டி நிவாரணங்களை பறிக்கும் அரசாணை களை திருத்தக் கோரி வெள்ளியன்று (டிச.23) நொச்சிக்குப்பத்தில் மீன வர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் 4,500 ரூபாய், தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 4,500 ரூபாய் என மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரணத் தொகை யாக 6 ஆயிரம் ரூபாய், மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் என குடும்பத்திற்கு வழங்கப்படு கிறது. மீனவர் குடும்பத்தில் ஒருவர் அரசுப் பணி அல்லது ஏதாவது ஒரு சமூக  நலத்திட்டத்தில் ஒருவர் உதவித் தொகை பெற்றால் கூட, மேற்கண்ட திட்டங்களில் இருந்து பயனாளிகள் நீக்கப்படுகின்றனர். எனவே, இதற்கான அரசாணை 90, 92 ஆகிய வற்றை திருத்த கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலை  நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை சார்பில் நடைபெற்ற இந்தப்போராட் டத்தில், எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் கோவளம் குப்பம் வரை உள்ள மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். 18வயது நிரம்பியவர்களை மீனவ கூட்டுறவு சங்கங்களில் சேர்க்க வேண்டும், கடலரிப்பால் பாதிக்கப் படும் மீனவ கிராமங்களை பாதுகாக்க வேண்டும், மாண்டஸ் புயலால் பாதிக்க ப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும், நொச்சிக்குப்பம் விரிவ டைந்த மீனவ குடும்பங்களுக்காக கட்ட ப்பட்ட 1188 வீடுகளில் மீதமுள்ள 864 வீடுகளையும் உரிய பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன.