கடலூர்,அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர 24 வது மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை நகர குழு உறுப்பினர் எம்.அன்பழகன் ஏற்றி வைத்தார். நகர குழு உறுப்பினர் பி.புண்ணியமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். நகர குழு உறுப்பினர் வி.குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை நகர செயலாளர் ஆர்.பாலமுருகன் சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எஸ். திருஅரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.மேரி, எம்.சீனிவாசன், பி.மாதவி உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். பி.பழனிவேல் நன்றி கூறினார். 15 பேர் கொண்ட நெய்வேலி நகர செயலாளராக ஆர்.பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் வாரிசுகள், வீடு - நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர், இறந்தோர் வாரிசு, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர், மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி படித்துள்ள இளை ஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும். பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ள சொசைட்டி தொழிலாளர்களுக்கு டபிள்யூ -3 ஸ்கேல் பொருத்தி ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.