மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வியாழனன்று (ஜன. 11) கொண்டாடப்பட்டது. விழாவில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா பரிசு வழங்கி பாராட்டினார். இதில் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் ராமசந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி, மாநில இணைச் செயலாளர்கள் யு.நடராஜன், வி.பாலசண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.