districts

img

புதுவை அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

புதுச்சேரி,டிச.20- அரசு அறிவித்த மழைகால நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி அரசு அறிவித்த மழைகால நிவாரணம் ரூ.5000 வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30ஆயிரம் வழங்க வேண்டும்.கரும்பு,வாழை போன்ற பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50ஆயிரமும், தோட்டப்பயிருக்கு ஏககர் ஒன்றுக்கு ரூ.40ஆயிரம் வழங்க வேண்டும். தென்பென்னை, சங்கராபரணி ஆற்று கரையோரம் வெள்ளப்பெருக்கால் கரை அறிப்பை சரிசெய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.75ஆயிரம் வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்தி விவ சாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச துணைத் தலைவர் முத்துலிங்கம் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரதேச செயலாளர் சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பிரதேச செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், கொம்யூன் செயலாளர் சரவணன்,கட்டுடமான தொழிலாளர் சங்க செயலாளர் கலியன், மாதர் சங்க பொறுப்பு தலைவர் இளவரசி,விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், நிர்வாகிகள் முருகையன், சதாசிவம் உட்பட திரளான விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் முடிவில், கோரிக்கை அடங்கிய மனுவை வட்டாட்சிய ரிடம் வழங்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட வட்டாட்சியர், அரசிடம்  வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.