districts

சென்னையில் காலாவதியான குளிர் பானங்கள் பறிமுதல்

சென்னை,பிப்.21- சென்னை புளியந்தோ பில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த 20 லட்சம் ரூபாய்  மதிப்பிலான குளிர்பா னங்கள் பறிமுதல் செய்யப் பட்டது. சென்னை புளியந்தோப்பு  பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காலா வதியான குளிர்பானங் கள் பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் திங்களன்று புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலை பகுதியில் உள்ள பின்னி மில் மைதானத்தில் உள்ள குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோனில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பல்வேறு  கம்பெனிகளின் குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்தபோது அதில் ஆங்காங்கே காலா வதியான குளிர்பானங்களும் இருந்தன இதனையடுத்து அந்த குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதி காரிகள் பறிமுதல் செய்த னர். குடோனுக்கு பக்கத்தில் மற்றொரு குடோன் இருப் பதை அறிந்த உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள்  அதனை திறந்து ஆய்வு செய்தனர். அப்போது அதில் காலாவதியான குளிர் பானங்கள் அதிக அளவில் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஒட்டு மொத்த மாக சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் 2 குடோன் களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அந்த குடோனை நடத்தி வந்த. சென்னை டிரேடர்ஸ் உரிமை யாளர் கலைமணி வயது 48 என்பவருக்கு உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் உரிய பதில் தருமாறு நோட்டீஸ் வழங்கினர். மேலும் அங்கிருந்த பொருட் களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.