புதுச்சேரி, ஜன.17- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பாகூர் சிவன் கோவில் அருகில் நடைபெற்ற “சமத்துவ பொங்கல் விழாவிற்கு கொம்யூன் தலைவர் அமுதா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் இளவரசி, சமம் பெண்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் சிவ காமி, ஓய்வு பெற்ற சுகாதாரப் பணி யாளர் பக்தவச்சலம், மாதர் சங்க நிர்வாகி கள் சத்யா, குப்பம்மாள், ரேவதி, வதனி, பரிமளா, ரேவதி, செல்வராணி, வள்ளி, தனுசு, பானு, ராசாத்தி, செல்வி, கலை வாணி, சங்கு நதி உள்ளிட்ட திராளான பெண்கள் குழந்தைகள் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக சர்வ மதத்தினர் பாரம்பரிய முறைப்படி புதிய பானையில் பொங்கலிட்டு பாட்டு பாடி, கும்மி, உரி அடித்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர். பாகூர் கரிகால சோழ சிலம்பாட்டம் குழுவினர் பெண்கள் குழந்தைகள் சிலம்பாட்டம், வால் வீச்சு, சுருள் வீச்சு என விழா சிறப்பாக நடை பெற்றது.