ராணிப்பேட்டை, டிச. 11 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கம் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை வாலாஜாவில் மாவட்டத் தலைவர் பொன். வேத முத்து தலைமையில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் அ. சேகர் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கு. புஷ்பராஜ் வேலை அறிக்கை முன் வைத்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ். ஜோசப் கென்னடி, ஆர். பாபு, என். சுந்தரேசன், இரா. மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச. பாரி நிறைவு செய்து உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக எஸ். ஜோசப் கென்னடி, செயலாளராக கு. புஷ்ப ராஜ், பொருளாளராக கு. அரிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்ய வேண்டும். ஊழியர் கள் மீதுள்ள பழிவாங்கும் குற்றக் குறிப்பாணைகளை கைவிட வேண்டும். பொதுக் கலந்தாய்வு மூலம் பணி யாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். காணொலி, கூகுள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்து வதை கைவிட வேண்டும். ஊரக உள்ளாட்சித் துறை யில் அரசு உதவியாளர்கள், இரவு காவலர்கள், பதி வறை எழுத்தர், ஓட்டுநர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.