சென்னை கடற்கரை விழுப்புரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, செப்.10- சென்னை கடற்கரை – விழுப்புரம் இடையே செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்கள் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப் படும் ரயில் புதன் மற்றும் 12ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் புதனன்றும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே 11.05, 11.30, 11.59 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 3.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் 12ம் தேதி, சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே ரத்து செய்யப் படுகிறது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில், திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே 10.10, 11 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் புதனன்று எழும்பூர், சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை இடையே 10.10, 10,40, 11.15 மணிக்கு இயக்கப் படும் ரயில்கள் இன்றும் தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய பரஸ்பர நிதி அறிமுகம்
சென்னை, செப்.10- எச்.எஸ்.பி.சி மியூச்சுவல் ஃபண்ட் ஏற்றுமதியை மை யக்கருவாக கொண்டு எச்.எஸ்.பி.சி இந்தியா எக்ஸ்போர்ட் ஆஃபர்ச் சூனிட்டீஸ் ஃபண்ட் என்ற புதிய பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் 19 அன்று முடி வடைகிறது. இத் திட்டம் பொருட்கள் அல்லது சேவைகளின் ஏற்றுமதியி லிருந்து பயனடையும் என்று எதிர்பார்க்கப்படும் அல்லது இவற்றில் ஈடுபடும் நிறுவனங்களின் பங்கு மற்றும் பங்கு தொடர்பான பத்திரங்களின் தீவிரமாக நிர்வகிக்கப்படும் போர்ட்ஃபோலியோவி லிருந்து நீண்ட கால மூலதன வளர்ச்சியை உருவாக்கு வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போலி என்சிசி முகாம் விவகாரம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி,செப்.10- கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடு மைகள் செய்த சிவராமன் விசாரணைக்கைதியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் நடத்திய போலி என்சிசி முகாமில் சம்பந்தப்பட்ட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாவட்டம் முழுதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், போலி என்சிசி முகாம் நடந்ததை மறைத்த குற்றத்திற்காக இதில் தொடர்புடைய காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் என்சிசி பயிற்றுநர் கோபு ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கோபுவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு
கிருஷ்ணகிரி,செப்.10- கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பெரியமணவாரனப் பள்ளி பகுதியை சேர்ந்த 25 வயது தேவராஜ் என்ற நபர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் முனியம்மா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் தேவராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி,செப்.10- காவேரிப்பட்டினம் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 46 வயது அண்ணாமலை, கூலி விவசாய தொழிலாளியான இவர் கூறம்பட்டு பகுதியில் நாவல் மரத்தை வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை கையால் பிடித்து அப்புறப்படுத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து இது
வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்
ஆவடி,செப்.10- ஆவடி அடுத்த அயப்பாக்கம் ECI சர்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன் - உஷா தம்பதியின் மகள் ரக்க்ஷிதா 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சிறுமி அயப்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென ஒரு நாய் சிறுமி ரக்க்ஷிதா மீது பாய்ந்து கையில் கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாயிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளனர். இதில் சிறுமி ரக்க்ஷிதா பலத்த காய மடைந்தார்.