districts

img

சென்னை - மாமல்லபுரம் வரை மின்சார ரயில் சேவை

கேளம்பாக்கம்,அக். 7- புறநகர் மின்சார ரயில் சேவையை திருப்போரூர் வழி யாக மாமல்லபுரம் வரை தொடங்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்போரூர் வட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. ஞாயிறன்று ( அக்.6) செங்கல் பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் கொடியை மூத்த உறுப்பினர் மணி ஏற்றி வைத்தார், வட்டக் குழு உறுப்பினர் விக்னேஷ் வரவேற்றார்,  வட்ட குழு உறுப்பினர் லிங்கன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வட்டக் குழு உறுப்பினர்கள் நந்தகுமார், விக்னேஷ், பொன்னப்பன், கண்ணகி, மணிகண்டன் ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார்  பேசினார், கட்சியின் திருப்பூர் வட்ட செயலாளர் எம்.செல்வம்  வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சேஷாத்திரி, க.பகத் சிங்க்தாஸ், எஸ்.ராஜா ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச்செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா பேசினார். தீர்மானம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள புறநகர் மின்சார ரயில் சேவையை திருப்போரூர் வழியாக மாமல்ல புரம் வரை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம், திருப்போரூர் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ள நிலையில் இந்த புதிய நகராட்சிகளுடன் இணைக்கப் பட்டுள்ள கிராமங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை  திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது வட்டக்குழுதேர்வு 9 பேர் கொண்ட திருப்போரூர் வட்டக் குழுவிற்கு எம்.செல்வம் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.