districts

img

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் இணையர் சீதா காலமானார்

சென்னை, செப். 29 - கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் இணையர் சீதா வெள்ளியன்று (செப்.27) காலமானார். அவருக்கு வயது 90. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை செயலாளர் ஜி.செல்வா, புதிய ஆசிரியன் இதழ் ஆசிரியர் பேரா.ராஜூ, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் சடங்குகளை தவிர்த்து ஆராய்ச்சிக்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனை பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.