சென்னை, மார்ச் 25- சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக் கொண்டு இளைஞர் இறந்த வழக்கில், தேடப்பட்டவர் கைது. புளியந்தோப்பு அருகே உள்ள தட்டாங்குளம் சந்தியப் பன் தெருவைச் சேர்ந்தவர் கோ.கோகுல் (22). இவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக போதை ஊசி செலுத்திக் கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. கோகுல் தட்டாங்குளம் விளையாட்டு மைதானத்தில் கடந்த 21ஆம் தேதி போதை ஊசியை தனது உடலில் செலுத்திக் கொண்டார். இதில் அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் போதை ஊசி,போதை மாத்திரை ஆகியவற்றை விற்பனை செய்வது பட்டாளம் அருகே உள்ள சி.எஸ். நகர் பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறை வாக இருந்த கார்த்திக்கை காவல் துறையினர் திங்களன்று கைது செய்தனர். விசாரணையில் கார்த்திக் அடிக்கடி மும்பைக்கு சென்று போதை ஊசி, மாத்திரை வாங்கி வந்து புளியந்தோப்பு பகுதியில் விற்று வந்தது தெரியவந்தது. மேலும் இறந்த கோகு லும், கார்த்திக்கிடம் போதைப் பொருட்களை வாங்கி பயன் படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.