கடலூர், ஜூலை 6- கடலூர் கடற்கரை சாலை யில் உள்ள டாக்டர் எம்.ஜி. ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இதில் ரேஷன் கடை களில் விற்பனையாளராக பணிபுரியும் ஊழியர்கள், மற்றும் பல்வேறு நிறு வனங்களில் வேலை செய்து கொண்டே 500க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பட்டய பயிற்சிக்கு தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது. இதற்கிடையே சனிக் கிழமை காலையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதில் ரேசன் கடைகளில் விற்பனை யாளராக பணி புரியும் சுமார் 130 விற்பனையாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்களை 70 விழுக்காடுக்கும் கீழ் வருகைப்பதிவு குறைவாக உள்ளதாக கூறி, பயிற்சி வகுப்பில் இருந்து வெளி யேற்றினர். இதனால் பயிற்சி வகுப்புக்கு வந்தவர்கள் அதிருப்தியுடன் வெளி யேறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த அதி காரிகளிடம், தேர்வு நடை பெற இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் வருகை பதிவேடு காரணம் காட்டி வெளியே அனுப்புவதால் எங்களது ஒரு வருடம் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் எங்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், இது தொடர்பாக உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இத னால் பயிற்சிக்கு வந்த அனைவரும் ஏமாற்றத்து டன் திரும்பினர்.