districts

img

மாற்று இடம் வழங்காமல் சாலையோர கடைகளை அகற்றாதீர்

சென்னை, ஆக. 31- பெரம்பூர் எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் எம்.எஸ்.மீரா மொய்தீன் தலைமை யில் நடைபெற்றது. எஸ்.ஜலால் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை துவக்கி  வைத்து பேசினார். எஸ். அறிவழகன் செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்தார்.  சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயராமன் பேரவையை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க  வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் போது, மாற்று இடம் வழங்கி விட்டு  அப்புறப்படுத்த வேண்டும், அனைவருக் கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தலைவராக எம்.எஸ்.மீரான் மொய்தீன், செயலாளராக எஸ்.அறிவழகன், பொரு ளாளராக புஷ்பநாதன், துணைத் தலைவர் களாக எஸ்.ஜலால், எம்.தேவி துணைச் செயலாளர்களாக சுந்தர், ஞானமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.