ராணிப்பேட்டை,ஆக. 4- ராணிப்பேட்டை நக ராட்சிக்குட்பட்ட பாலாற்றங் கரையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த இடத்தினை புனர மைத்து பொதுமக்கள் பார்வையிடலாம், ராணிப் பேட்டையின் வரலாற்று நினைவுச் சின்னமாக மாற்றிட கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தியின் முயற்சியால் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் பொதுப்பணித்துறை யின் பட்ஜெட் அறிவிப்பு ரூ. 2.5 கோடியில் ராஜா ராணி நினைவிடம் புனர மைக்கப்படும் என அறி விக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திர கலா முன்னிலையில் பார்வையிட்டு, நினைவு மண்டபத்தை புனர மைக்கப்பட்டது குறித்த வரைபடங்களை ஆய்வு செய்து பூங்காவுடன் நினைவு மண்டபம் பொது மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் ராணிப் பேட்டையின் ஒரு சிறந்த இடமாக மாற்றப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலு வலர் ந. சுரேஷ், நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலை வர் சீம. ரமேஷ் கருணா, வட்டாட்சியர் அருள் செல்வன், பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர் திரிபுரசுந்தரி, நகர்மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன் குமார், வினோத், கோபி மற்றும் பலர் உடன் இருந்தனர்.