வேலூர், ஆக.17 - வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள கெம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் பட்டியலின மக்கள் பல தலைமுறைகளாக வழிபாடு செய்து வந்தனர். இந்த கிராமத்தில் அருள்வாக்கு கூறி வரும் மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த லோகநாதன், பட்டியலின மக்கள் இந்த கோயிலுக்குள் வரக்கூடாது. இது காளி யம்மன் அருள்வாக்கு என்று சில வாரங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் பட்டிய லின மக்கள் புகார் அளித்தனர். அதன் பெயரில் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காவல்துறையினர் முன்னி லையில பட்டியலின மக்களை நீங்கள் செருப்பு போன்றவர்கள் கோவிலுக்கு வெளியே தான் இருக்க வேண்டும்”என்று கூறி யுள்ளார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, இருதரப்பினரும் சமாதானமாக செல்லுங்கள் என்று வருவாய் அலுவலர் கூறியதும் கூட்டத்தை முடித்து கொண்டுள்ளனர். இதையடுத்து, கோவில் மற்றும் கிராம மக்களின் பாது காப்புக்கு காவலர்கள் பணி யில் அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில், கோவில் முன்பு இருந்த சிலைகள் மற்றும் கோயில் சுற்றுச்சுவரை சாமியார் லோகநாதன் இடித்து தள்ளியுள்ளார். இந்த தகவல்களை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.காத்தவராயன், செயலாளர் வி.குபேந்திரன், கணேஷ் (விவசாயிகள் சங்கம்), நவீன், சங்கர் (வாலிபர் சங்கம்), இரா.சிவா (திராவிடர் விடுதலை கழகம்) ஆகியோர் கோயிலை பார்வையிட்டனர். பிறகு, வேலூர் மாவட்ட ஆட்சியர், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர், கே.வி.குப்பம் வட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் புனரமைத்து பட்டிய லின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்து காளியம்மன் கோவிலை பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அமைதி பேச்சுவார்த்தையில் சாதியை சொல்லி இழிவு படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.