districts

img

பள்ளி கட்டிடத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 7-

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும், கழிப்பறை வசதி உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை தேவை களை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் ஆத மங்கலம் புதூர் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முரு கன், மாவட்டச் செயலாளர் சிஎம்.பிரகாஷ், சுந்தர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்க டேசன், பகுதி நிர்வாகிகள்  தமிழ்ச்செல்வன், சத்ய ராஜ், சாமிக்கண்ணு, ஏகாம் பரம், தியாகராஜன் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர்.

;