districts

img

பணித்தள பொறுப்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் பண்ணப்பள்ளி ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக நடத்துவதும்,பல மாற்றுத்திறனாளி களுக்கு100 நாள் வேலை வழங்காமலும்,முழு ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதும் மிகக் குறைவான நாட்களே வேலை தருவதும் தொடர்கிறது. இதனை கண்டித்தும் பணித்தள பொறுப்பாளரை மாற்றக் கோரியும்,ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் குடும்ப அட்டையை ஏஏஒய் அட்டையாக மாற்றி தர வலியுறுத்தியும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாநில பொருளாளர் சக்கரவர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் பெரியசாமி,தலைவர் திருப்பதி, பொருளாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.