districts

img

நெடுஞ்சாலை துறையை கண்டித்து ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் நெடுஞ்சாலை துறையின் பாரபட்சமான செயல்பாடுகளை கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் குடியாத்தம் பாலிடெக்னிக் அருகே கிளைச் செயலாளர் எம்.வினாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமார், நிர்வாகிகள் பி.காத்தவராயன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் ஆகியோர் பேசினர்.