இந்தி திணிப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைவுத்தேர்வை எதிர்த்து திமுக இளைஞர் அணி சார்பில் சென்னையில் சனிக்கிழமை அக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணித்தலைவர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.