districts

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே வெள்ளியன்று ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலைகளை கண்டித்து  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள்  ஏ.சங்கரன், ஏ.கண்ணதாசன்,  ஏ.கிருஷ்ணமூர்த்தி, என்.மேகநாதன் (சிறுபான்மைநலக்குழு), வி.பாலகிருஷ்ணன் (சிஐடியு), எம்.முருகன், ஜான் போஸ்கோ(கட்டுமானம்), பி.முருகன், எம்.முத்துவேல், எஸ்.சித்ரா (மாற்றுத்திறனாளிகள் சங்கம்), சேகர்(ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி), தமிழரசன் (தீஒமு), எல்.விஸ்வநாதன் (கலப்பு திருமண தம்பதியர் சங்கம்), தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெருமாள் (விச) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.